கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வரும், ஜன.,4 முதல், 5 லட்சத்து, 13 ஆயிரத்து, 318 ரேஷன் கார்டுகளுக்கு, சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரிசி பெறும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் 2,500 ரூபாய் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5 லட்சத்து, 13 ஆயிரத்து, 318 ரேஷன் கார்டுகளுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வரும், 2021 ஜன.,4 முதல், 12 வரை வழங்கப்பட உள்ளன. விடுபட்டவர்களுக்கு, 13ல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இது குறித்த சந்தேகங்களுக்கு, மாவட்ட வழங்கல் அலுவலக தொலைபேசி எண், 04343- 234677ஐ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE