கரூர்: கரூர் மாவட்ட, பா.ம.க., சார்பில், வன்னியர் சமூக மக்களுக்கு, 20 சதவீத இடஒதுக்கீடு வழங்ககோரி, அக்கட்சியினர் தான்தோன்றி மலை பஞ்., யூனியன் அலுவலகத்தில், நேற்று மனு கொடுத்தனர். தமிழகத்தில் வன்னியர் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், 20 சதவீத தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, பா.ம.க., சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும், பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில் மனு கொடுக்கப்படும் என, பா.ம.க., நிறுவன தலைவர் ராமதாஸ் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து, கரூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களிலும், பா.ம.க., சார்பில் மனு வழங்கப்பட்டது. தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில், மாநில பா.ம.க., துணை செயலாளர் பாஸ்கரன் தலைமையில், அக்கட்சியினர், மனு அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE