குளித்தலை: குளித்தலை, இ -சேவை மற்றும் ஆதார் மையத்திற்கு ஜெனரேட்டர் வசதி அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளித்தலை தாலுகா அலுவலக வளாகத்தில், அரசு கட்டுப்பாட்டில், இ- சேவை மற்றும் ஆதார் பொது மையம் செயல்பட்டு வருகிறது. இ -சேவை மையத்தில் இரண்டு பெண்கள் பணியில் உள்ளனர். ஆதார் மையத்தில் ஒரு பெண் மட்டும் பணியில் உள்ளார். இந்நிலையில், மின்வாரிய பராமரிப்பு நாள் மற்றும் அடிக்கடி மின் துண்டிப்பு நாட்களில் பொது மக்கள் பதிவு மற்றும் ஆதார் புகைப்படம் எடுக்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். யாரும் பாதிக்காத வகையில் ஜெனரேட்டர் வசதியோ அல்லது யு.பி.எஸ்., வசதி செய்து தரவேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE