கரூர்: தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் அருகே, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, சின்டெக்ஸ் தொட்டியில் உள்ள குழாய்கள் உடைந்துள்ளன. இதனால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், போர்வெல் குழாயில் தண்ணீர் வர நீண்ட நேரம் ஆகிறது. இதனால், போர்வெல் குழாயை சீரமைத்து, புதிதாக சின்டெக்ஸ் தொட்டி வைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE