நாமக்கல்: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நாமக்கல் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. மார்கழி திருவாதிரை நட்சத்திரமான நேற்று அனைத்து சிவன் கோவில்களிலும் உள்ள நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம், அலங்காரம் நடைபெறும்.
* நாமக்கல் அடுத்த வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பு அபி?ஷகம், அலங்காரம், திருக்கல்யாணம், தீபாராதனை நடந்து, பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு நடராஜர் அனைத்து வீதிகளிலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* நாமக்கல் தட்டாரத்தெரு ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நடந்த திருவாதிரை ஆருத்ரா தரிசன விழாவில், நடராஜருக்கு சிறப்பு அபி?ஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
* நாமக்கல்-மோகனூர் சாலை கணவாய்பட்டி, கே.கே., நகர், சித்தர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிவன், பாலாம்பிகை, வாராகி, ப்ரத்யங்கிரதேவி கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் நடராஜருக்கு சிறப்பு அபி?ஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE