விரும்பிய வேலைக்கு லீவு எதற்கு
மக்கள் பணி செய்வது எங்களுக்கு கிடைத்த வரமாக கருதுகிறேன். பண்டிகை, விசேஷ தினங்கள், புத்தாண்டு கொண்டாட்டம் உள்ளிட்டவைகளில் பங்கேற்கும் மக்கள் பாதுகாப்பு அம்சங்களையும், அரசின் விதிமுறைகளையும் அவசியம் பின்பற்ற வேண்டும். பொறுப்பற்ற செயலாலும், அலட்சியப் போக்காலும் பெரும்பாலும் விபத்துக்கள் நிகழ காரணமாக அமைகிறது. மக்கள் பங்கேற்கும் பொது நிகழ்வு களை அனைவரும் சந்தோஷமாக பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும். மற்றவர்களின் மகிழ்ச்சியான விடுமுறை தினத்தன்று, தீயணைப்புத்துறையின் சார்பில் பணிசெய்வது மனதிற்கும் திருப்தியளிக்கிறது. விரும்பிச் செய்யும் வேலைக்கும் விடுமுறை எடுக்காமல் பணி செய்வது பிடித்தமான ஒன்றாகும், என்றார்.நா.பொன்னையா, நிலைய அலுவலர்தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள், சாயல்குடி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE