ராமநாதபுரம், : ராமநாதபுரம் ராணுவ வீரர் வீட்டில் கதவை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்டது.
ராமநாதபுரம் காட்டூரணி ரோடு வைகை நகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் 30. ராணுவத்தில் பணியாற்றுகிறார், இவரது மனைவி பிரியங்கா 27, மட்டும்வீட்டில் தனியாக வசித்தார். இந்நிலையில் பத்து நாட்களுக்கு முன் தெளிச்சாத்த நல்லுார் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள், எல்.இ.டி., டி.வி., ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ.1:30 லட்சம். பிரியங்கா புகாரில் கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE