ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பெண் போலீசை தாக்கிய கணவன்,அவரது தாய்மீது போலீசார் வழக்குபதிந்தனர்.
ராமநாதபுரம் நகர் போலீசில் காவலராக இருப்பவர் நாகராணி. இவருக்கும் கணவர் பாலமுருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் பி.1 போலீஸ் குடியிருப்பில் நாகராணி தனியாக வசித்து வந்தார்.நேற்று கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் நாகராணியை திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் வீட்டின் கதவை சேதப்படுத்தினார். நாகராணி கணவர் பாலமுருகன், அவரது தாய் மீது புகார் கொடுத்துஉள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE