ராமநாதபுரம் : பிரிட்டன் கொரோனா பீதியால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைக்கு வருவோர் எண்ணிக்கை சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சில மாதங்களுக்குமுன்பு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த போது தினசரி 1000 பேர் வரை கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இரண்டு மாதங்களாக கொரோனா பரிசோதனை செய்வோர் எண்ணிக்கை குறைந்தது.கடந்த ஒரு வாரமாக வீரியமிக்க பிரிட்டன் கொரோனா குறித்த அச்சம்மக்களிடம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் பிரிட்டனில்இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த 10 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் சில நாட்களாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொரோனா பரிசோதனை மையத்திற்கு பரிசோதனைக்கு வருவோர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE