மானாமதுரை : மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரோட்டில் வேகமாக செல்லும் பஸ்களினால் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களில் பலர் பலியாவது தொடர்கிறது.
மதுரை - ராமேஸ்வரம் ரோட்டில் தினந்தோறும் 200 க்கும் மேற்பட்ட அரசு பஸ்களும்,50 க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களும் மானா மதுரை வழியாக சென்று வருகின்றன. ராமேஸ்வரத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், வடமாநிலத்தவர்களும் பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர்.இந்த ரோட்டில் மதுரையிலிருந்து பரமக்குடிக்கு திருப்புவனம்,மானாமதுரை வழியாக இயக்கப்படும் தனியார் பஸ்கள் அசுர வேகத்தில் செல்வதினால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் பலியாகி வருகின்றனர்.
மேலும் இந்த பஸ்களில் தடை செய்யப்பட்ட ஹாரன்களை பயன்படுத்துவதால் மற்ற வாகனங்களில் வருபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து துறை அதிகாரிகள், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வேகமாக செல்லும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE