சாயல்குடி : சாயல்குடி அருகே உள்ள எஸ்.தரைக்குடி, செவல்பட்டி, முத்துராமலிங்கபுரம், கொண்டுநல்லான்பட்டி, கொக்கரசன்கோட்டை,வெள்ளையாபுரம், டி.கரிசல்குளம், செஞ்சடைநாதபுரம்,வி.சேதுராஜபுரம், உச்சிநத்தம், அன்னபூவன்நாயக்கன்பட்டிஉள்ளிட்ட கிராமப்பகுதிகளில் தொடர்ந்து இருநாட்களாக மழை பெய்து வருகிறது.
இப்பகுதிகளில் 500 ஏக்கaரில் குண்டு மிளகாய், மல்லி, வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வயல்களில் நடவு செய்யப்பட்ட,மிளகாய் செடிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளது. வாலம்பட்டி விவசாயி உபகேந்திரன் கூறியதாவது; அதிக காரத்தன்மை கொண்ட குண்டுரக மிளகாய்களை ஏக்கருக்கு 30 ஆயிரத்திற்கு மிகாமல் செலவு செய்துநடவு செய்துள்ளோம். மூன்று முறை விதைத்தும், முளைக்காததால்,நிலத்தை உழுதுவிட்டு வெளிமாவட்டத்தில் இருந்து மிளகாய் கன்றுகளை நட்டு வளர்ந்து வரும் நிலையில், மழையால் பாதிப்பை சந்தித்துள்ளோம்.
மாவட்ட நிர்வாகம், மழையால் பாதிப்பை சந்தித்துள்ளவிவசாயிகளின் நிலங்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கிடநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE