கீழக்கரை : கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி மைதானத்தில் மகளிருக்கான கைப்பந்து, பந்து எறிதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
கைப்பந்து போட்டியில்பிளாட்டினம் அணி முதல் பரிசையும், டைமண்ட் அணி இரண்டாம் பரிசையும் பெற்றன. வெற்றி பெற்ற அணியினருக்கானபரிசளிப்பு விழாவில் பி.எஸ்.எம். மஹ்மூது உசேன் தலைமைவகித்தார். அல்தாப் உசேன் கிராஅத் ஓதினார். அகமது பிலால் வரவேற்றார்.மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர், தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லுாரி முதல்வர் சுமையா, சபியா அகமது, பாத்திமா, ஷாஜகான், பயிற்சியாளர் அமுதா உட்பட பலர் பங்கேற்றனர்.நவ்சாத் பேகம் நன்றி கூறினார்.கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE