சிங்கம்புணரி : சிங்கம்புணரி தாலுகாவில் செவ்வந்தி பயிரிட்ட விவசாயிகள் இந்த முறை விளைச்சல் திருப்தியாக இருந்ததாக தெரிவித்தனர்.
சிங்கம்புணரி அருகே பிரான்மலை மற்றும் எஸ்.புதுார் ஒன்றியத்தில் மேலவண்ணாரிருப்பு, கீழவண்ணாரிருப்பு, பொட்டபட்டி, கே.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 50 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் செவ்வந்தி பூக்களை சாகுபடி செய்துள்ளனர். கடந்த மாதங்களில் பெய்த பரவலான மழை காரணமாக இப்பூக்கள் இந்த முறை கூடுதல் விளைச்சல் கண்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிக விலை கிடைக்காத நிலையில் இருந்தாலும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஓரளவு கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் திருப்தி அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE