தேக்கடி:பெரியாறு அணை நீர்பிடிப்பில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து 800 கன அடியாக அதிகரித்தது.நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி தேக்கடியில் 18.2 , பெரியாறில் 9.8 மி.மீ., மழை பதிவானது.
இதனால் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 373 கன அடியாக இருந்த நீர்வரத்து 800 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் 120.30 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. தமிழகப்பகுதிக்கு 778 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 2687 மில்லியன் கன அடி. நேற்று கடுமையான வெப்பம் நிலவியதால் நீர்வரத்து குறையும் வாய்ப்புள்ளது.வைகை அணை நீர்மட்டம் 58.50 அடியாக (மொத்த உயரம் 71 அடி) இருந்தது. நீர்வரத்து 821 கன அடியாகவும், நீர்திறப்பு 69 கன அடியாகவும் இருந்தது. நீர்இருப்பு 3324 மில்லியன் கன அடியாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE