திருப்பூர்:மின் பராமரிப்பு பணி காரணமாக, 4ம் தேதி மாநகராட்சி பகுதியில் குடிநீர் சப்ளை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் அறிக்கை:திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகத்தின் தலைமை நீரேற்று நிலையத்தில், மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி வரும், 4ம் தேதி அப்பகுதியில் மின் தடை செய்யப்படும்.எனவே, இத்திட்டத்தில் நீரேற்றும் பணி நிறுத்தப்படுவதால், மாநகராட்சியில், இத்திட்டத்தில், பெறப்படும் குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைபடும். பொதுமக்கள் குடிநீரை சேமித்தும், சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE