சென்னை:போலி 'நீட்' தேர்வு மதிப்பெண் சான்றிதழை தாக்கல் செய்து மருத்துவ கல்லுாரியில் சேர முயன்ற வழக்கில் பரமக்குடி மாணவியின் தந்தை பாலசந்திரனை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் தீக் ஷா 18. இவர் பல் டாக்டரான தந்தை பாலசந்திரனுடன் டிச.7ல் சென்னையில் மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்றார். தீக் ஷா போலி நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழை தாக்கல் செய்து மருத்துவ கல்லுாரியில் சேர முயன்றார். இதுகுறித்து பெரியமேடு போலீசார் ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
மாணவியையும், தந்தை பாலசந்திரனையும் 48, விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் மூன்று முறை சம்மன் அனுப்பினர்; ஆஜராகாமல் பாலச்சந்திரன் குடும்பத்துடன் தலைமறைவானார். பெங்களூரூவில் பதுங்கியிருந்த பாலசந்திரனை கைது செய்த போலீசார் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி முன் ஆஜர்படுத்தினர்.பாலசந்திரனை ஜன.11 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதையடுத்து சைதாப்பேட்டை கிளை சிறையில் அவர் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE