காட்டுமன்னார்கோவில்ஊ: டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, காட்டுமன்னார்கோவிலில் விவசாயிகள் சார்பில் உறுதி மொழியேற்பு போராட்டம் நடந்தது.அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகள், விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து மீட்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உறுதிமொழியேற்பு போராட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகம் முன் நடந்தது.போராட்டத்திற்கு காவிரி பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவர் இளங்கீரன் தலைமை தாங்கினார். 20க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பங்கேற்றனர்.மா.கம்யூ., மாவட்டக் குழு பிரகாஷ், இந்திய கம்யூ., இளங்கோவன், விவசாய சங்கம் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.திட்டக்குடிதிட்டக்குடி பஸ் நிலையத்தில் நடந்த போராட்டத்திற்கு, விவசாய சங்க வட்டச் செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு காமராஜ், வட்டத் தலைவர் ராஜேந்திரன், துணைச் செயலாளர் அன்பழகன், துணைத்தலைவர் வரதன் உட்பட பலர்பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE