நெய்வேலி: நெய்வேலியில் நள்ளிரவில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.நேற்று முன்தினம் நள்ளிரவு நெய்வேலியில் புத்தாண்டைக் கொண்டாடிய இரண்டு இளைஞர்கள், ஹுண்டாய் காரில், மந்தாரக்குப்பத்தில் இருந்து நெய்வேலி டவுன்ஷிப் நோக்கி அதிவேகமாக சென்றனர்.அண்ணாசாலை அருகே சென்றபோது, முன்னால் சென்ற பைக்கை முந்த முயன்றபோது, எதிர்பாராத விதமாக கார் சென்டர் மீடியனில் மோதி, தலைகுப்புற கவிழ்ந்தது.இந்த விபத்தில், காரில் இருந்த இருவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். காரில் வந்தவர்கள் யார் என்ற விபரம் தெரியவில்லை. நள்ளிரவில் நிகழ்ந்த இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE