பண்ருட்டி: பண்ருட்டியில் ரஜினி மக்கள் மன்ற கிளை நிர்வாகிகள் அ.தி.மு.க., இணைந்தனர்.அண்ணாகிராமம் ஒன்றியம், மாளிகைமேடு பகுதியைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சிவா, தலைவர்கள் மணி, சத்யா, கோவிந்தராஜ் உட்பட 100 பேர் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி அ.தி.மு.க., வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, முன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அண்ணாகிராமம் ஒன்றிய சேர்மன் ஜானகிராமன், ஒன்றிய செயலாளர் பாபுபுஷ்பராஜ் முன்னிலை வகித்தனர்.சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., முன்னிலையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.மாளிகைமேடு ஊராட்சி தலைவர் சுந்தர்ராஜன், தொழில்நுட்ப செயலாளர் மகாதேவன், சவுந்தரராஜன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE