சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் புத்தாண்டை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். மன்ற தலைவர் பால்ராஜ், டாக்டர் நாச்சியப்பன் முன்னிலை வகித்தனர். கார்த்திகேயன் வரவேற்றார். அகவல் பாராயணத்தை தொடர்ந்து சன்மார்க்க கொடியை மன்ற செயலாளர் நாராயணன் ஏற்றினார். பகல் 12:00 மணிக்கு பஸ் நிலையத்தில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் ரோட்டரி தலைவர் மூர்த்தி, சங்கை தமிழ் சங்க தலைவர் சுப்ராயன், யோகா ஆசிரியை விஜயலட்சுமி,ரமேஷ், இளையாபிள்ளை ஆகியோர் பங்கேற்றனர்.செந்தில் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE