கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், மாவட்ட தமிழ்ச்சங்க நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, பாவரசு பாரதி சுகுமாறன் தலைமை தாங்கினார். கவிஞர்கள் முத்தமிழ் முத்தன், கோமுகிதாசன், நடராஜன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மாவட்ட தமிழ்ச்சங்க துவக்கவிழா செயல்பாடுகள் மற்றும் நடைமுறை குறித்து விவாதிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத் தலைவர் கிருஷ்ணா, செயலாளர் கவிதைத் தம்பி, பொருளாளர் அவ்வை கல்யாணி நடராஜன் உட்பட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE