கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஓவியர்கள் தங்களின் படைப்புகளை ஓவிய சிற்ப கலைக்காட்சியில் சேர்த்திட விண்ணப்பிக்க கலெக்டர் கிரண் குராலா அறிவுறுத்தியுள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசின் கலை பண்பட்டுத்துறை சார்பில், தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், கடலுார், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓவிய படைப்புகளைப் பெற்று ஓவிய கலைக்காட்சி நடத்தப்பட உள்ளது.ஓவியர்கள் தங்களது கலைப் படைப்புகளைத் தெரிவு செய்வதற்கு மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனரால் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட உள்ளது.கண்காட்சியில் முதல் பரிசு 3,500 ரூபாய் வீதம் 10 பேருக்கும், இரண்டாம் பரிசாக 2,500 ரூபாய் வீதம் 10 பேருக்கும், மூன்றாம் பரிசாக 1,500 ரூபாய் வீதம் 10 பேருக்கும் வழங்கப்பட உள்ளது.எனவே, மாவட்டத்தில் ஆர்வம் உள்ள ஓவிய மற்றும் சிற்ப கலைஞர்கள் தங்களது ஓவியம் மற்றும் படைப்புகளை தனி நபர் கண்காட்சியாக வைத்திட்டதன் விபரக் குறிப்பு மற்றும் படைப்புகளின் எண்ணிக்கை விபரங்களுடன் உதவி இயக்குனர், மண்டலக்கலை பண்பாட்டு மையம், பழைய மாவட்ட ஆட்சியரக வளாகம், நீதிமன்ற சாலை, தஞ்சாவூர் - 613001, தொலைபேசி: 04362-232252, மொபைல் எண்.94449 49739 / 94425 07705 என்ற முகவரியில் வரும் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE