திருவெண்ணெய்நல்லுார்: உலக நலம் பெற வேண்டி பக்தர்கள் பாத யாத்திரை நிகழ்ச்சி நடந்தது.கடலுார் மாவட்டம், பண்ருட்டி வட்டம் திருத்துறையூர் கிராமத்தில் இருந்து, 250க்கும் மேற்பட்ட சிவ பக்தர்கள் உலக நலம் வேண்டி பாதயாத்திரையாக திருவெண்ணெய்நல்லுார் கிருபாபுரீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.பின்னர் கோவிலில், கிருபாபுரீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி உள்ளிட்ட திரவியங்களில் அபிேஷகம் நடத்தி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சரவணக்குமார் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE