திண்டிவனம்: திண்டிவனத்தில் வக்போர்டு இடத்தை வழங்க கோரி, ஜமாத்தார்கள் போலீஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டம்நடத்தினர்.திண்டிவனத்தில் வக்போர்டு இடத்தை வருவாய் துறையினர் ஆக்கிரமித்ததாக கூறி, வண்டிமேடு வ.உ.சி., திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த பள்ளிவாசல் தலைவர்கள், ஜமாத்தார்கள் முடிவு செய்தனர். அதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டரன்.இந்நிலையில் போலீஸ் தடை உத்தரவை மீறி நேற்று மாலை, திண்டிவனம் வட்ட பள்ளிவாசல் தலைவர்கள், நிர்வாகிகள், ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. த.மு.மு.க., மாநில வழக்கறிஞர் அணி பொருளார் சலிம் பாஷா சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வி.சி.க., வடக்கு மாவட்ட செயலாளர் சேரன், இந்திய கம்யூ., இன்பஒளி, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முக்மது ரிஸ்வான், வி.சி.க. மாநில நிர்வாகி ஜபார் உட்பட பலர் பேசினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE