பாகூர்: தனியார் நிறுவன தொழிலாளியின் கை விரல்கள் துண்டானது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.கடலுார் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன், 47; இவர் கிருமாம்பாக்கம் அடுத்த கன்னியக்கோவிலில் தனியார் சீயக்காய் துாள் கம்பெனியில் பணி புரிகிறார்.கடந்த 28ம் தேதி காலை ராஜசேகரன் பணியில் இருந்த போது, இயந்திரத்தில் அவரது வலது கை சிக்கியது. இதில் அவரது நடு மற்றும் மோதிர விரல்கள் துண்டாகின. ஆள் காட்டி விரலிலும் பலத்த காயம் ஏற்பட்டு, காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.புகாரின் பேரில், தனியார் நிறுவன உரிமையாளர் மற்றும் சூப்பர்வைசர் மீது கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE