உடுமலை:உடுமலை நகராட்சியில், குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடந்தது. சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில், வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், போலீஸ், தொழிலாளர் துறை, சுய உதவிக்குழு, சைல்டு லைன் உள்ளிட்டோர் கொண்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், உடுமலை நகராட்சியில், குழந்தைகள் பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டு, முதல் கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.இதில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணம், கடத்தப்படுதல், சட்டத்திற்கு புறம்பாக தத்து கொடுத்தல் உள்ளிட்ட குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்து, பாதுகாப்பை உறுதி செய்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. காலாண்டிற்கு ஒரு முறை குழு உறுப்பினர்கள் கூடி ஆலோசனை நடத்தி, குழந்தைகள் உரிமைகளை பாதுகாப்பது என முடிவு செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE