புதுடில்லி:நாட்டில், 1.02 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், 96.08 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்; 2.54 லட்சம் பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:கடந்த, 24 மணி நேரத்தில், நாடு முழுதும், 10.62 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகள் வாயிலாக, 20 ஆயிரத்து, 35 பேரிடம், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது.இவர்களுடன், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, இரண்டு லட்சத்து, 86 ஆயிரத்து, 709 ஆக அதிகரித்து உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில், 2.54 லட்சம் பேர், தற்போது சிகிச்சையில் உள்ளனர். இவர்களின் விகிதம், ஒட்டுமொத்த பாதிப்பில், 2.47 சதவீதம்.கொரோனா பாதிப்பில் இருந்து, 98 லட்சத்து, 83 ஆயிரத்து, 461 பேர் குணமடைந்துள்ளனர்; மீட்பு விகிதம், 96.08 சதவீதமாக உள்ளது.கொரோனா பாதிப்பால், கடந்த, 24 மணி நேரத்தில், மஹாராஷ்டிராவில், 58 பேர், கேரளாவில், 30; மேற்கு வங்கத்தில், 29; சத்தீஸ்கரில், 21 பேர் உட்பட, 256 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களுடன், இதுவரையிலான பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 48 ஆயிரத்து, 994 ஆக உயர்ந்துள்ளது.இறப்பு எண்ணிக்கையில், 49 ஆயிரத்து, 521 பேருடன், மஹாராஷ்டிரா முதலிடத்தில் தொடர்கிறது.இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில், 12 ஆயிரத்து, 122 பேரும், அடுத்ததாக கர்நாடகாவில், 12 ஆயிரத்து, 90 பேரும் பலியாகி உள்ளனர்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE