பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஊத்துக்காடு ரோடு வழியாக ஜோதிநகர், வால்பாறை செல்லும் வாகனங்கள் செல்கின்றன. இந்த ரோட்டில், ரயில்வே கேட் அமைந்துள்ளது. ரயில்வே கேட் அருகே தோண்டப்பட்ட குழி, பல நாட்களாக மூடப்படாமல் உள்ளதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எதிர், எதிரே வாகனங்கள் வரும் போது, ஒதுங்கிச் செல்ல வழியில்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பொதுமக்கள் கூறுகையில், 'குடிநீர் குழாய், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளது. பணிகளை விரைந்து முடித்து குழியை மூட நடவடிக்கை எடுத்தால், வாகனங்களில் செல்வோர் அச்சமின்றி செல்வார்கள். அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE