திருச்சி:திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஹபிபா பீவி, 68; கணவர் மற்றும் மகன் இறந்து விட்டதால், தனியே வசித்து வந்தார். சேலை வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலை, குடிதண்ணீர் பிடிக்க வெளியில் வரவில்லை. அக்கம் பக்கத்தினர், அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர்.வீட்டுக்குள் ஹபிபா பீவி, நிர்வாண நிலையில், கழுத்தறுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு கிடந்தார். பணம், நகைக்காக மர்ம நபர்கள் கொலை செய்தனரா என்ற கோணத்தில், துவரங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE