புதுக்கோட்டை:சபரிமலை செல்ல முடியாத பக்தர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில், இருமுடி காணிக்கை செலுத்தி, தரிசனம் செய்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கொசப்பட்டியில், 18 படிகளுடன் கூடிய தென்சபரி என்ற அய்யப்பன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சபரிமலை செல்லும் பக்தர்கள், புரட்டாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் மாலை அணிந்து, விரதம் இருந்து செல்வது வழக்கம்.கொரோனா காரணமாக, சபரிமலைக்கு, 10 வயதுக்குள் உள்ளவர்களும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் செல்ல தற்போது அனுமதி இல்லை.
இதனால், சபரிமலை செல்ல முடியாத அனைத்து வயது பக்தர்களும், தற்போது, கொசப்பட்டி அய்யப்பன் கோவிலுக்கு வந்து, இருமுடி காணிக்கை செலுத்தி, வழிபாடு செய்து செல்கின்றனர். இருமுடி கட்டி வரும் பக்தர்களுக்கு மட்டும், 18 படிகளில் ஏறிச் சென்று, தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இதர பக்தர்கள், மாற்று வழியாக சென்று தரிசனம் செய்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE