சென்னை:பெண்களுடன் 'டேட்டிங்' செய்யலாம் என ஆசை வார்த்தை கூறி 'ஆன்லைன்' மூலம் வாலிபரிடம் 26 லட்சம் ரூபாயை மோசடி நடந்துள்ளது.
சென்னை பம்மல் சங்கர் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் 46; தனியார் நிறுவன மேலாளர். அவரது அலைபேசிக்கு டிச. 26ல் ஒரு அழைப்பு வந்தது.அதில் பேசியவர் தன்னை 'சாரா' என அறிமுகப்படுத்திக் கொண்டு பெண்களுடன் 'டேட்டிங்' செய்யலாம் என ஆசை வார்த்தை கூறி நான்கு பெண்களின் புகைப்படத்தைஅனுப்பியுள்ளார்.
பின் ஒரு ஆன்லைன் முகவரியை கொடுத்து அதில் 1100 ரூபாய் செலுத்த கூறியுள்ளார். சந்திரசேகரும் பணம் செலுத்தி பதிவு செய்துள்ளார். இப்படியே 21 லட்சம் ரூபாய் வரை அவர் செலுத்தியுள்ளார்.டிச.30ல் சந்திரசேகர் மீண்டும் 5 லட்சம் ரூபாய் செலுத்துயுள்ளார். அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் இதையடுத்து போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அப்புகாரை பெற்று விசாரணைக்காக பரங்கிமலை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பிவிசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE