ஆனைமலை:ஆனைமலை, கரியாஞ்செட்டிபாளையத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கூலித்தொழிலாளி இறந்தார்.ஆனைமலை, கரியாஞ்செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சுரேஸ், 26. இவர் நேற்று காலை, பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், மொபட்டில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.கரியாஞ்செட்டிபாளையம் பிரிவில், இவருக்கு பின்னால் வந்த வாகனம் மோதியதில், துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அங்குள்ளவர்கள் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அனுப்பினர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். கோட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE