சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, 4ம் தேதி பதவியேற்கிறார்.

அவருக்கு, கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஏ.பி.சாஹி, நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். புதிய தலைமை நீதிபதியாக, கோல்கட்டா உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை, ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.

புதிய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, 4ம் தேதி பதவியேற்கிறார். கவர்னர் மாளிகையில், காலையில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி, குஜராத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு, இன்று காணொலி வாயிலாக பிரிவு உபசார நிகழ்ச்சி நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE