சிந்தாதிரிப்பேட்டை : அ.தி.மு.க., நிர்வாகியை கத்தியால் குத்திவிட்டு தப்பிய கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை பம்பிங் ஸ்டேஷன் சாலையைச் சேர்ந்தவர் சதீஷ், 32; சேப்பாக்கம் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணை தலைவர். இவர், நேற்று அதிகாலை வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த நான்கு பேர் கத்தியால் அவரை சரமாரியாக குத்தி தப்பினர். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியில், 'வெல்டிங்' கடை நடத்தி வரும் ராஜா என்பவரின் தங்கை மகன், முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தியது தெரியவந்தது. அவரை தேடும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE