9 பேர் கைது
நகரி: சித்துார் மாவட்டம், பெரும்தேசம் அடுத்த, கொத்த செருவு அருகே, செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக, புத்துார் வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத் துறையினர், அங்கு இரு கார்கள் மூலம் கடத்தப்படவிருந்த, 18 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.மேலும், செம்மரக்கட்டை கடத்தியதாக, காளஹஸ்தி மஸ்தான், 28, சலீம், 30, கவுஸ்பாஷா, 32, தொட்டம்பேடு கிருஷ்ணய்யா,35, கஸ்துாரிராஜேஷ், சலபதி உட்பட ஒன்பது பேரை வனத் துறையினர் கைது செய்தனர்.
விபத்தில் வாலிபர் பலி
நகரி: சித்துார் மாவட்டம், பி.டி.எம்., அடுத்த, கெங்குரெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேக்பாஷா,28. இவர், அதே பகுதியில் உள்ள கால்நடைத் துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம், இருசக்கர வாகனத்தில், ஷேக்பாஷா சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, புலிகல்லு கிராமம் அருகே, சாலையில் நிலை தடுமாறி வாகனத்துடன் விழுந்தார். இதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். பி.டி.எம்., போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE