கள்ளிமந்தையம் : வேலம்பட்டி - மூலனுார் ரோட்டில் கவுண்டப்பார் கோயில் பிரிவு அருகே ஓடையில் தரைப்பாலம் அமைக்க வேண்டும்.
வேலம்பட்டியிலிருந்து மூலனுாருக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகம் உள்ளது.இந்த ரோட்டில் கவுண்டப்பார்கோயில் பிரிவு அருகே ஒரு ஓடை செல்கிறது. மழைக்காலத்தில் இந்த ஓடையில் காட்டாற்று வெள்ளம் சென்று சேறும் சகதியுமாக மாறிவிடும். அப்போது வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிவிடுகின்றன.இந்த ரோட்டின் மற்ற இடங்களில் ஓடைகளின் குறுக்கே தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.ஆனால் இந்த இடம் கண்டு கொள்ளப்படவில்லை.
இங்கு தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாலப்பன்பட்டி சின்னச்சாமி கூறுகையில், ''தரைப்பாலம் இன்றி இப்பகுதியில் தொடர்ந்து விபத்து நடப்பதால், அவசியம் தரைப்பாலம் அமைக்க வேண்டும்''என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE