பழநி : பழநிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாதயாத்திரை பக்தர் கள், மலைக் கோயிலில் குடமுழுக்கு மண்டபம் வழியே பொது தரிசனத்தில் காத்திருந்து முருகரை தரிசனம் செய்தனர்.
அலகு குத்தி, காவடிகள் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செய்கின்றனர். நேற்று மதுரை மாவட்டம் கோச்சடையை சேர்ந்த பக்தர்கள் 22 பேர் 9 அடி நீளமுள்ள அலகு குத்தி வந்தனர். இவர்கள் 3 நாட்களாக பழநிக்கு பாதயாத்திரையாக வந்தனர். 11 நாட்கள் விரதமிருந்தவர்கள் பழநி இடும்பன் கோயிலில் அலகு குத்தினர். பின் மலைக்கோயிலை கிரிவலம் வந்து மலையேறி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE