பரமக்குடி : பரமக்குடியில் சில நாட்களாக மழையின்றி இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், நேற்றுமுன்தினம் காலை 5:00 மணி தொடங்கி நாள் முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் விளைச்சல் இன்றி உள்ளது.காற்றின் திசைவேகம் மாறுபாட்டின் காரணமாக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது. இந்நிலையில் பரமக்குடியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது.பின்னர் சிறிது நேர வெயிலுக்கு பின், காலை 11:00 மணி, மதியம் 2:00 மணி மற்றும் 5:00 மணி தொடங்கி விட்டு, விட்டு மழை பெய்தது.
ஏற்கனவே பருவம் தவறிய மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நயினார் கோவில் உள்ளிட்ட ஒன்றியங்களில் தொடர் மழையால் பயிர்கள் நீரில் மூழ்கியது.மேலும் மிளகாய், கடலை மற்றும் காய்கறி செடிகள் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நயினார்கோவில் பகுதியில் விவசாயிகள் இரண்டாம் கட்டமாக மிளகாய் செடிகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் பரமக்குடியில் மழை அளவு அதிகரித்துள்ளது.
இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியில் இருந்தாலும், பருவம் தவறிய மழை பொழிவால் விவசாயிகள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE