ஈரோடு: ஈரோட்டில் வரும், 11ல், தமிழக அரசை கண்டித்து, தமிழக விவசாயிகள் சங்கத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் சுப்பு கூறியதாவது: மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு முன்பே, தமிழக அரசு கொண்டு வந்த, மாநில ஒப்பந்த சாகுபடி சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இதேபோல் கால்நடை இனப்பெருக்க சட்டம், விவசாயிகளின் சுயசார்பை அழித்து, இயற்கையை அழிக்கும் செயலாக உள்ளது. கூட்டுறவு வங்கி, மத்திய அரசு கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் நிலுவை தொகையை பெற்று தர பயன்படவில்லை. இந்த சட்டங்களை கண்டித்து வரும், 11ல், ஈரோட்டில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE