மொடக்குறிச்சி: டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மொடக்குறிச்சி தாசில்தார் சங்கர் கணேஷுக்கு, மக்கள் மனு அனுப்பியுள்ளனர். மனு விபரம்: அவல்பூந்துறையில் இருந்து, பாரதிநகர் மற்றும் கல்லியங்காடு செல்லும் வழியில், தனியார் தோட்டத்தில் டாஸ்மாக் கடை அமைக்க கட்டட பணி நடக்கிறது. இதனால் பள்ளி மாணவியர், விவசாய வேலைக்கு செல்லும் பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். மாலை வேளையில் கடையில் குவியும் குடிமகன்களால், பணி முடிந்து வீடு திரும்பும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவியர் அச்சத்துடனே சாலையை கடக்க வேண்டிய நிலை உருவாகும். எனவே, டாஸ்மாக் கடை அமைப்பதை கைவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE