தலைவாசல்: வரத்து அதிகரிப்பால், பச்சை மிளகாய் விலை சரிந்துள்ளது. சேலம் மாவட்டம், தலைவாசல் சுற்றுவட்டாரங்களில், பச்சை மிளகாய் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, சிவசங்கராபுரம், அண்ணா நகர், பாரதி நகர், மணிவிழுந்தான் உள்ளிட்ட பகுதிகளில், மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இரு வாரங்களுக்கு முன், அங்கிருந்து, தலைவாசல் காய்கறி மார்க்கெட்டுக்கு, தினமும், 10 டன் வரத்து இருந்த நிலையில், ஒரு கிலோ, 30 ரூபாய்க்கு விற்றது. தற்போது, உள்ளூரில் மட்டும், 15 டன், கடலூர் பகுதிகளில் இருந்து, 5 டன் என, வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விலை சரிந்து, நேற்று, ஒரு கிலோ, 15 முதல், 20 ரூபாய் வரை விற்பனையானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE