ஓமலூர்: காடையாம்பட்டி தாலுகா, காருவள்ளி, கரட்டுப்பட்டியைச் சேர்ந்தவர், 17 வயது சிறுமி. தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படிக்கிறார். கடந்த டிச., 29 இரவு, வீட்டில் இருந்த சிறுமி, மறுநாள் காலை காணவில்லை. இதுகுறித்து, சிறுமியின் தந்தை புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்தனர். அதில், தொப்பூரை சேர்ந்த ராஜேந்திரன் மகனான, பேக்கரி மாஸ்டர் பசுபதி, 20, ஆசை வார்த்தை கூறி, சிறுமியை கடத்தியது தெரிந்தது. இதனால், அவரை, 'போக்சோ' சட்டத்தில், நேற்று, போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE