ஓமலூர்: ஓமலூர், ஆட்டுக்காரனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 60. இவர், எம்.செட்டிப்பட்டி, பாப்பாங்கரட்டில், கந்தசாமி என்பவரிடம், மரம் வெட்டும் வேலை செய்து வந்தார். பணி முடிந்து, கடந்த டிச., 30 மாலை, 6:00 மணிக்கு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வள்ளுவர் தெரு அருகே சென்றபோது, டிராக்டர், பின்புறமாக வந்து மோதியதில், ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் இறந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதுகுறித்து, ராஜேந்திரனின் மனைவி சரஸ்வதி, 52, நேற்று முன்தினம் அளித்த புகார்படி, தொளசம்பட்டி போலீசார், டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE