ஓசூர்: ஓசூர் அருகே, இரு குழந்தைகளுடன் பெண் மாயமானார். ஓசூர், அன்னை நகரை சேர்ந்தவர் பைரோஸ், 30. பேகேப்பள்ளியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார்; இவர் மனைவி அல்மாஸ், 27. இவர்களுக்கு தோயா, 6, ஆஷிபா, 2, என, இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த, 30 இரவு வீட்டில் இருந்து, குழந்தைகளுடன் வெளியே சென்ற அல்மாஸ், திரும்பி வரவில்லை. அதிர்ச்சியடைந்த பைரோஸ், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்து பார்த்தார். ஆனால் அவர்கள் இருக்கும் இடம் தெரியாததால், நேற்று முன்தினம் மத்திகிரி போலீசில் புகாரளித்தார். அதில், தன் இறைச்சி கடையில் வேலை செய்யும் ஸ்ரீகாந்த், 26, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE