ஓசூர்: உத்தனப்பள்ளி அருகே, மொபட் மீது, கார் மோதிய விபத்தில், ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர் உட்பட இருவர் பலியாகினர். ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி அருகே, அலேசீபத்தை சேர்ந்தவர் எல்லப்பா, 65. ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர்; இவரும், அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் நாகராஜ், 44, என்பவரும், நேற்று இரவு, 8:00 மணிக்கு டி.வி.எஸ்., மொபட்டில், உத்தனப்பள்ளி நோக்கி சென்றனர். ராயக்கோட்டை-உத்தனப்பள்ளி சாலையில் உள்ள கூடுமாக்கனப்பள்ளி அருகே வரும் போது, உத்தனப்பள்ளியில் இருந்து ராயக்கோட்டை நோக்கி சென்ற டாடா இண்டிகா கார் டிரைவர், சாலையில் பஞ்சராகி நின்று கொண்டிருந்த டிராக்டரை கடந்து செல்வதற்காக, வலதுபுறமாக காரை திருப்பினார். அப்போது எதிரே வந்த மொபட் மீது நேருக்கு நேர் கார் மோதியது. இதில், எல்லப்பா சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்து நாகராஜ், ஓசூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிச்சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE