நாமக்கல்: புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கி நேற்று அதிகாலை வரை தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நாமக்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்திலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பங்கு தந்தைகள் ஜான் அல்போன்ஸ் தலைமை வகித்தார். இரவு, 11:00 முதல், அதிகாலை, 4:00 மணி வரை சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.
* நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள தமிழ் பாப்திஸ்து திருச்சபையில் போதகர் மனோவா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மேலும், கணேசபுரம் சி.எஸ்.ஐ., சர்ச் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து செய்திகளை பகிர்ந்து கொண்டனர். மேலும், இனிப்பு வழங்கி புதிய ஆண்டை வரவேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE