கரூர்: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
* கரூர், கல்யாண பசுபதீஸ்வரா கோவில், தான்தோன்றி மலை வெங்கடரமணர் கோவில், கரூர் மாரியம்மன் கோவில் மற்றும் ஐயப்பன் கோவில்களில், நேற்று காலை முதல் சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
* கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கருப்பத்தூர் சிவன், ஐயப்பன், சிந்தலவாடி மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில், சுவாமிகளுக்கு சிறப்பு அபி ?ஷகம், அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அதேபோல், மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE