வாஷிங்டன்:பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர், ஜெய்ஷ் உள்ளிட்ட, 70க்கும் அதிகமான, சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின், 460 கோடி ரூபாயை அமெரிக்கா முடக்கியுள்ளது.
அமெரிக்க நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக, அமெரிக்கா தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பயங்கரவாத அமைப்புகளின் நிதி, ஆண்டுதோறும் முடக்கப்படுகிறது.கடந்த, 2018ல், சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின், 336 கோடி ரூபாயை அமெரிக்கா முடக்கியது. 2019ம் ஆண்டில், சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின், 460 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு சொந்தமான நிதியும், இதில் அடக்கம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE