புதுச்சேரி: புத்தாண்டு தினத்திற்கு கணவர் விடுமுறை எடுக்க மறுத்ததால், இளம்பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருக்கனுார் அடுத்த வம்புப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன், டிரைவர். இவரது மனைவி ஜெய பிரதா, 30; இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.புத்தாண்டு தினத்தன்று, வேலைக்கு செல்ல வேண்டாம், ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுக்குமாறு கணவரிடம் ஜெயபிரதா கேட்டுள்ளார். இதற்கு, மணிவண்ணன் மறுத்து விட்டதாக தெரிகிறது.இதனால், மனமுடைந்த ஜெயபிரதா நேற்று முன்தினம் வீட்டின் அறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE