புதுச்சேரி: கொரோனா தடுப்பூசி ஒத்திகையை முதல்வர் நாராயணசாமி பார்வையிட்டார்.கொரோனா தொற்று தடுப்பூசிக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளது. இதை தொடர்ந்து, தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர உள்ளது. தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைப்பது, எப்படி செலுத்துவது போன்றவற்றுக்கான வழிமுறைகளை மத்திய அரசு அனுப்பி உள்ளது. இதன்படி, நாடு முழுதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நேற்று நடந்தது.புதுச்சேரியில் அரசு பொது மருத்துவமனை, மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, கோரிமேடு இ.எஸ்.ஐ., மருத்துவமனை ஆகிய 4 இடங்களில் ஒத்திகை நேற்று நடந்தது. காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் 5 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடந்தது.தடுப்பூசி செலுத்த தனி அறை, ஊசி போடுவதற்கு முன் செய்யும் மருத்துவ பரிசோதனைகள், தடுப்பூசி செலுத்திய பின் தங்க வைக்கும் அறை, டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் தயார் நிலை போன்றவை குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது.அரசு பொது மருத்துவமனையில் நடந்த ஒத்திகையை முதல்வர் நாராயணசாமி பார்வையிட்டார். மருத்துவ கண்காணிப்பாளர் வாசுதேவன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE